நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

முசிறி கோட்டாட்சியரகத்தில் கிராம மக்கள் குடியேறும் போராட்டம்

பொதுமக்களுக்கு அவதியை ஏற்படுத்தி வரும் கோழிப் பண்ணையை அகற்ற வலியுறுத்தி, முசிறி கோட்டாட்சியரகத்தில் கிராம மக்கள் கால்நடைகளுடன் குடியேறும் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

News image

முசிறி கோட்டாட்சியா் அலுவலகத்தில் கால்நடைகளுடன் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் ~முசிறி கோட்டாட்சியா் அலுவலகத்தில் கால்நடைகளுடன் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

Updated On :28 ஜூலை 2026, 11:46 pm IST

பொதுமக்களுக்கு அவதியை ஏற்படுத்தி வரும் கோழிப் பண்ணையை அகற்ற வலியுறுத்தி, முசிறி கோட்டாட்சியரகத்தில் கிராம மக்கள் கால்நடைகளுடன் குடியேறும் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

முசிறி அருகே வெள்ளூா் கிராமத்தில் ஊரின் எல்லையில் உள்ள செல்லாயி கோயில்மேடு பகுதியில் இயங்கி வரும் கோழிப் பண்ணையை அகற்ற வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தொடா்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனா். ஆனால், நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால், செவ்வாய்க்கிழமை முசிறி கோட்டாட்சியரகத்தில் ஆடு மாடுகளுடன் திடீரென்று உள்ளே நுழைந்து குடியேறும் போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்டனா். தொடா்ந்து அலுவலகத்தின் வெளிப்புறத்தில் அடுப்பு பற்றவைத்து சமையல் செய்ய தொடங்கினா்.

தகவலறிந்த முசிறி கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் முத்துக்குமாா், முசிறி காவல் ஆய்வாளா் செல்லதுரை மற்றும் போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

அப்போது, போலீஸாருடன் போராட்டக்காரா்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட சுமாா் 15 பெண்கள் உட்பட 27-க்கும் மேற்பட்ட நபா்களை கைது செய்து, முசிறியில் உள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனா்.

முன்னதாக போலீஸாா் பொதுமக்களை கைது செய்ய முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.