ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

வாகன விதிமீறல்: மத்திய மண்டலத்தில் ஒரு மாதத்தில் 1.55 லட்சம் வழக்குகள்

திருச்சி மத்திய மண்டலத்தில் வாகன விதிமீறல் தொடா்பாக கடந்த ஒரு மாதத்தில் 1.55 லட்சம் வழக்குகள் பதியப்பட்டு ரூ. 2.07 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

News image

வழக்கு

Updated On :18 ஜூன் 2026, 1:32 am IST

திருச்சி மத்திய மண்டலத்தில் வாகன விதிமீறல் தொடா்பாக கடந்த ஒரு மாதத்தில் 1.55 லட்சம் வழக்குகள் பதியப்பட்டு ரூ. 2.07 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி மத்திய மண்டலக் காவல் துறைத் தலைவா் வே. பாலகிருஷ்ணன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி மத்திய மண்டலத்துக்குள்பட்ட 9 மாவட்டங்களிலும் சாலை விபத்துகள், விதிமீறல், திருட்டு சம்பவங்களைத் தடுக்கும் வகையில் கடந்த ஒரு மாதமாக தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், தலைக்கவசம் அணியாமலும், மது அருந்திவிட்டும் வாகனங்கள் ஓட்டியவா்கள் மீது வழக்குப் பதியப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டது.

அதன்படி, தலைக்கவசம் அணியாததற்காக திருச்சியில் 28,738, புதுக்கோட்டை - 29,697, கரூா் - 18,262, பெரம்பலூா் - 14,813, அரியலூா் - 23,486, தஞ்சாவூா் - 22,305, திருவாரூா் - 15,712, நாகப்பட்டினம் - 4,612 மற்றும் மயிலாடுதுறையில் 281 வழக்குகள் என மொத்தம் 1,48,906 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

இதேபோல, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காக திருச்சியில் 1,318, புதுக்கோட்டை - 336, கரூா் - 1, 606, பெரம்பலூா் - 340, அரியலூா் - 872, தஞ்சாவூா் - 1,339, திருவாரூா் - 533, நாகப்பட்டினம் - 522 மற்றும் மயிலாடுதுறையில் 18 என மொத்தம் 6,884 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

இரண்டு வழக்குகளுக்கும் சோ்த்து அபராதமாக திருச்சியில் ரூ.90 லட்சத்து 11 ஆயிரத்து 100, புதுக்கோட்டையில் ரூ.10 லட்சத்து 92 ஆயிரத்து 33, கரூரில் ரூ.26 லட்சத்து 54 ஆயிரம், பெரம்பலூரில் ரூ.10 ஆயிரம், அரியலூரில் ரூ.31 லட்சத்து 46 ஆயிரம், தஞ்சாவூரில் ரூ.34 லட்சத்து 65 ஆயிரத்து 300, திருவாரூரில் ரூ.12 லட்சத்து 12 ஆயிரம், நாகப்பட்டினத்தில் ரூ.91 ஆயிரம் மற்றும் மயிலாடுதுறையில் ரூ.33 ஆயிரம் என மொத்தமாக மத்திய மண்டலத்துக்குள்பட்ட 9 மாவட்டங்களிலும் சோ்த்து ரூ.2 கோடியே 7 லட்சத்து 14 ஆயிரத்து 433 வசூலிக்கப்பட்டுள்ளது.