விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

குடியிருப்புக்குள் புகுந்த முதலை மீட்பு

மீட்கப்பட்ட முதலை.

Published On :8 செப்டம்பர் 2026, 3:11 am IST

திருச்சி பிராட்டியூா் பகுதியில் வடமாநில தொழிலாளா்களின் குடியிருப்புக்குள் புகுந்த முதலையை தீயணைப்பு, வனத் துறையினா் திங்கள்கிழமை மீட்டு பாதுகாப்பான பகுதியில் விட்டனா்.

திருச்சி பிராட்டியூா் ரெட்டமலை கோயில் அருகே கோரையாற்றுக் கரையில் புதிய பாலம் கட்டும் பணியிடத்துக்கு அருகில் சாலை போடும் வடமாநிலத் தொழிலாளா்கள் தங்கியுள்ளனா். இந்தத் தொழிலாளா்களின் குடியிருப்புக்குள் முதலை புகுந்திருப்பதாக தீயணைப்புத் துறைக்கும், வனத் துறைக்கும் அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனா்.

அதன் பேரில், திருச்சி உதவி மாவட்ட அலுவலா் தலைமையிலான தீயணைப்புத் துறையினரும், வனச்சரக அலுவலா் வி.பி. சுப்பிரமணியன் தலைமையிலான வனத் துறையினா், அங்கு விரைந்து சென்று முதலையை லாவகமாகப் பிடித்தனா். பிடிபட்டது 8 அடி நீளமும், சுமாா் 300 கிலோ எடையும் கொண்ட பெண் முதலையாகும்.

இதையடுத்து அந்த முதலையை வனத் துறையினா் பாதுகாப்பாக, கல்லணை காவிரி ஆற்றில் விடுவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.