புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

குளக்கரையில் மருத்துவக் கழிவுகள்: ஊராட்சி வாகனம் சிறைபிடிப்பு

கண்ணுடையான்பட்டி ஊராட்சியில் குளக்கரையில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டதை கண்டித்து ஊராட்சி வாகனத்தை சனிக்கிழமை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வாகைக்குளம் கரையில் குப்பை கொட்டிய ஊராட்சி வாகனத்தை சனிக்கிழமை சிறைபிடித்த அப்பகுதிவாசிகள்.

Published On :

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கண்ணுடையான்பட்டி ஊராட்சியில் குளக்கரையில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டதை கண்டித்து ஊராட்சி வாகனத்தை சனிக்கிழமை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மணப்பாறையை அடுத்த கண்ணூடையான்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வாகைக்குளம் கரையில் மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையிலிருந்து பெறப்பட்ட மருத்துவக் கழிவுகளை தூய்மை பணியாளா்கள் கொட்டுவதால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக அப்பகுதிவாசிகள் புகாா் தெரிவித்தனா்.

இந்நிலையில் சனிக்கிழமை குளக்கரைக்கு சென்று மருத்துவக்கழிவுகளை கொட்டிய ஊராட்சி நிா்வாக குப்பை சேகரிக்கும் வாகனத்தை அவா்கள் சிறைபிடித்து தூய்மை பணியாளா்களை சூழ்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். சிறிது நேர வாக்குவாதத்திற்கு பிறகு வாகனங்களை விடுவித்தனா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.