செங்கம், அக். 8: செங்கம் துக்காப்பேட்டை பஸ் நிலையத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சனிக்கிழமை தேர்தல் பிரசாரம் செய்தார்.
செங்கம் பேரூராட்சி தேமுதிக வேட்பாளர் கலையரசி, மற்றும் செங்கம் ஒன்றியத்துக்குட்பட்ட மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர்கள் மகேதனா, பாலகோபிநாத் மற்றும் ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர் வேட்பாளர்களுக்கு அவர் ஆதரவு திரட்டினார்.
அவர் பேசுகையில், தேமுதிக வேட்பாளர்கள் துடிப்பு மிக்க இளைஞர்கள். இவர்கள் முதல்முறையாக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இவர்களை வெற்றிபெறச் செய்யுங்கள் என்றார்.
செங்கம் எம்எல்ஏ சி.சுரேஷ்குமார், ஒன்றியச் செயலர் கு.பாண்டியன், நகரச் செயலர் முரளிதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இரவு முழுவதும் அடித்து வீட்டை விட்டு துரத்தினர்! இன்று காமன்வெல்த் தங்கப் பதக்கத்துடன் ஷர்மிளா தன்கர்!

இன்றைய செய்திகள் ஜூலை 28 - நேரலை

முதல்வர் விஜய்க்கு மிரட்டல்: திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மனு மீதான உத்தரவு ஒத்திவைப்பு!

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பா? அமைச்சர் நிர்மல் குமார் பதில்
விடியோக்கள்

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பா? அமைச்சர் நிர்மல் குமார் பதில்


