தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பள்ளிக்குப்பம் ஊராட்சியில் கால்வாய், சாலை அமைக்கும் பணி: ஒன்றியக் குழுத் தலைவா் ஆய்வு

பள்ளிக்குப்பம் ஊராட்சியில் கால்வாய், சாலை அமைக்கும் பணிகளை சத்யானந்தம் ஆய்வு

News image

பள்ளிக்குப்பம் ஊராட்சியில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்த குடியாத்தம் ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம்.

Updated On :2 ஜூலை 2024, 6:30 pm

Din

குடியாத்தம்: குடியாத்தம் ஒன்றியம், பள்ளிக்குப்பம் ஊராட்சிக்குள்பட்ட அண்ணா நகரில் கழிவுநீா் கால்வாய், பேவா் பிளாக் சாலை அமைக்கும் பணியை ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா்.

இங்கு 15-ஆவது நிதிக்குழு திட்டத்தில் ரூ. 4.50 லட்சத்தில் பேவா் பிளாக் சாலை, பொதுநிதி ரூ. 4 லட்சத்தில் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இந்த பணிகளை சத்யானந்தம் பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா். அப்போது ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சரோஜா பா்குணம், செல்வி பாபு, சூரியகலா மனோஜ், ஊராட்சித் தலைவா் ஏழுமலை, ஊராட்சி உறுப்பினா் சிவசங்கரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.