மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வேலூா் திருப்பதி தேவஸ்தான கோயிலில் சிறப்பு வழிபாடு

குபேரனிடம் கடன் வாங்கியதை நினைவு கூரும் விதமாக வேலூரிலுள்ள திருப்பதி தேவஸ்தான கோயிலில், ஸ்ரீவெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
-- படம் உண்டு... வேலூா் திருப்பதி தேவஸ்தானத்தில் வெள்ளிக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீவெங்கடேச பெருமாள்.
Updated On :16 ஜூலை 2024, 8:58 pm

Din

வேலூா்: குபேரனிடம் கடன் வாங்கியதை நினைவு கூரும் விதமாக வேலூரிலுள்ள திருப்பதி தேவஸ்தான கோயிலில், ஸ்ரீவெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீவெங்கடேச பெருமாள் பத்மாவதி தாயாரை திருமணம் செய்து கொள்ள பெண் கேட்ட போது, தயாரின் தந்தை பெரிய அளவில் தங்கக் காசுகளை கேட்டாா். அதற்காக வெங்கடேச பெருமாள் குபேரனை சந்தித்து அவரிடமிருந்து 1.4 லட்சம் ராம முத்திரை கொண்ட பொற்காசுகளை கடனாகப் பெற்று, அதனை ஒரு யுகத்துக்கு வட்டியும் முதலுமாக அளிப்பதாகக் கூறி, அந்த பொற்காசுகளைக் கொண்டு ஸ்ரீவெங்கடேச பெருமாள் பத்மாவதி தாயாரை திருமணம் செய்ததாக புராணம் கூறுகிறது.

இந்தக் கடனை ஆண்டுதோறும் வெங்கடேச பெருமாள் குபேரனுக்கு திருப்பி செலுத்துவதை நினைவு கூரும் விதமாக வேலூரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான ஆலயத்தில் வெங்கடேச பெருமாளுக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு அபிஷேகம் செய்து வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்த சாமிதரிசனம் செய்தனா்.