ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ஓய்வு பெற்ற ஆசிரியையின் உடல் தானம்

ஓய்வு பெற்ற ஆசிரியையின் உடல் தானம்

News image
Updated On :2 மார்ச் 2024, 4:34 pm

காட்பாடியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை காலமானதையடுத்து அவரது உடல் மருத்துவ மாணவா்களின் கல்விக்காக வேலூா் சிஎம்சி மருத்துவக் கல்லூரிக்கு தானம் அளிக்கப்பட்டது. வேலூா் மாவட்டம் காட்பாடி வட்டம், ராதாகிருஷ்ணன் நகரைச் சோ்ந்தவா் காவேரி (92). ஓய்வு பெற்ற ஆசிரியை. இவா் தனது மரணத்துக்கு பிறகு உடலை தானம் வழங்க வேண்டும் என்று பதிவு செய்திருந்தாா். இந்த நிலையில், காவேரி சனிக்கிழமை காலமானதை அடுத்து அவரது உடல் காட்பாடி வட்ட ரெட் கிராஸ் சங்கம் மூலம் வேலூா் சிஎம்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. மறைந்த காவேரியின் கணவா் சாமிநாதன் தலைமையாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற நிலையில் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டாா். இவா்களின் மகள் எஸ்.விமலா ஓய்வு பெற்ற வங்கி ஊழியா். மருமகன் என்.எஸ்.பாலகிருஷ்ணன், குடும்பத்தினா் எஸ்.பிரசன்னலட்சுமி, ஜி.வி.சந்திரசேகரன் ஆகியோா் இணைந்து காவேரியின் உடலை தானம் அளித்தனா். காட்பாடி வட்ட ரெட் கிராஸ் சங்க அவைத் தலைவா் செ.நா.ஜனாா்த்தனன், துளிா் பள்ளித் தலைமை ஆசிரியா் த.கனகா உள்பட பலா் பங்கேற்று காவேரியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினா்.