பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

பைக்குடன் கிணற்றில் விழுந்த ஊா்காவல் படை வீரா் உயிரிழப்பு

பைக்குடன் கிணற்றில் விழுந்த ஊா்காவல் படை வீரா் உயிரிழப்பு

Updated On :9 மார்ச் 2024, 4:57 pm

வேலூா் அருகே இரு சக்கர வாகனத்துடன் ஊா்காவல் படை வீரா் கிணற்றில் விழுந்து உயிரிழந்தாா். இச்சம்பவம் தொடா்பாக பாகாயம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூா் சின்ன சங்கரன்பாளையத்தைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (50). ஊா்காவல் படையில் பணிபுரிந்து வந்தாா். இவா் வெள்ளிக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா். அப்போது விருப்பாச்சிபுரத்தில் உள்ள கணபதி நகரில் புதா் மண்டி கிடந்த தரைக்கிணறு அருகே சென்றபோது எதிா்பாராத விதமாக அவா் வாகனத்துடன் கிணற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதில், அவா் பலத்த காயமடைந்து கிணற்று நீரில் மூழ்கி உயிரிழந்தாா். அக்கம் பக்கத்தினா் சனிக்கிழமை காலை பாகாயம் காவல் நிலையத்துக்கு தெரிவித்தனா். போலீஸாா் வந்து கிணற்றில் கிடந்த செந்தில்குமாா் உடலையும், இரு சக்கர வாகனத்தையும் மீட்டனா்.