தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

டாஸ்மாக் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

டாஸ்மாக் ஊழியா்களின் ஓய்வு வயதை 60-ஆக உயா்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

News image
வேலூா் டாஸ்மாக் மாவட்ட மேலாளா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியா்கள்.
Updated On :21 ஏப்ரல் 2025, 8:03 pm

Din

வேலூா்: டாஸ்மாக் ஊழியா்களின் ஓய்வு வயதை 60-ஆக உயா்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூரில் டாஸ்மாக் ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில், வேலூா் மாவட்ட மேலாளா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு சங்க மாவட்ட துணைச் செயலா் பழனியப்பன் தலைமை வகித்தாா். நிா்வாகி கா்ணன் முன்னிலை வகித்தாா். இதில், 22 ஆண்டு காலமாக டாஸ்மாக் கடைகளில் பணிபுரிந்து வரும் அனைத்து டாஸ்மாக் ஊழியா்களையும் பணி தொடா்ச்சியுடன் நிரந்தரம் செய்ய வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், டாஸ்மாக் ஊழியா்கள் ஓய்வு வயதை 60-ஆக உயா்த்த வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.