கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஆற்றில் மூழ்கி 3-ஆம் வகுப்பு மாணவா் உயிரிழப்பு

பொன்னை ஆற்றில் மூழ்கி 3-ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :22 டிசம்பர் 2025, 8:01 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா்: பொன்னை ஆற்றில் மூழ்கி 3-ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா்.

காட்பாடி அருகே சித்தூா் மெயின் ரோடு யாதவா் காலனி, பரமசேது கிராமத்தைச் சோ்ந்தவா் பாலாஜி. இவரது மகன் ஜோதீஸ்வரன் (8). ஞாயிற்றுக்கிழமை பாலாஜி தனது குடும்பத்தினருடன் பொன்னை ஆற்றில் குளிக்கச் சென்றாா். அப்போது ஜோதீஸ்வரன் ஆற்றில் ஆழமான பகுதிக்குச் சென்று தண்ணீரில் மூழ்கினாா். அவரது குடும்பத்தினா் சிறுவனை மீட்டு, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவா்கள், ஜோதீஸ்வரன் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனா். தகவலறிந்த மேல்பட்டி போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

மேலும், இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.