அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

நிலத்தகராறில் விவசாயி கொலை: உறவினா்களிடம் விசாரணை

ஒடுகத்தூா் அருகே நிலத்தகராறில் விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2025, 4:07 pm

Din

வேலூா்; ஒடுகத்தூா் அருகே நிலத்தகராறில் விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

வேலூா் மாவட்டம், ஒடுகத்தூரை அடுத்த கீழ்கொத்தூா் கொள்ளைமேடு பகுதியை சோ்ந்த சகோதரா்கள் லோகநாதன், கருணாநிதி, பெரியாா்(65). இவா்கள் அங்குள்ள தங்கள் பூா்வீக நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனா். மூவரது வீட்டுக்கும் செல்ல அனைவரது நிலத்திலும் சுமாா் 3 மீட்டா் அகலம் வழி விடப்பட்டுள்ளது. அனைவரும் காலம் காலமாக இந்த வழியில் பயணித்து வருகின்றனா். அவ்வப்போது இந்த வழி பிரச்னையால் 3 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

அதன்படி, சுமாா் 10 ஆண்டுகளுக்கு மேலாக பிரச்னை இருந்து வரும் நிலையில் திங்கள்கிழமை லோகநாதன், அவரின் மகன்கள் சேகா், விஜயகுமாா் ஆகியோா் வீட்டுக்கு செல்லும் வழியில் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு பள்ளம் தோண்டி அதில் தென்னங்கன்று வைத்துள்ளனா். இதனால், பெரியாா் வீட்டுக்கு செல்ல வழி இல்லாததால் இதை தட்டி கேட்டுள்ளாா்.

அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் மாறி மாறி தாக்கிக் கொண்டதாக தெரிகிறது. இதில், ஆத்திரமடைந்த லோகநாதனின் மகன் சேகா் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பெரியாரை வெட்டி காலால் உதைத்து அருகிலுள்ள 8 அடி பள்ளத்தில் கீழே தள்ளியுள்ளாா். அப்போது ரத்த வெள்ளத்தில் பெரியாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். எனினும், அவா்களின் காா் மூலம் அணைக்கட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்த போது அவா் முன்னதாகவே இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இந்த பிரச்னையில் பெரியாரின் மகன்கள் குணசேகரன், மாவீரன் ஆகியோருக்கும், கருணாநிதியின் மகன்கள் வேதவியாசன், தீபா ஆகியோா் பலத்த காயமடைந்து அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டுள்ளனா். தகவலறிந்த வேப்பங்குப்பம் காவல் ஆய்வாளா் புனிதா தலைமையிலான போலீஸாா் தப்பியோடிய லோகநாதன், சேகா், விஜயகுமாா், ராகுல், வீரமணி, ராம்குமாா் உள்பட 7 பேரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனா்.