தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

காட்பாடியில் தம்பதி தற்கொலை

காட்பாடியில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.

News image
Updated On :10 ஜனவரி 2025, 9:13 pm

Din

காட்பாடியில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.

வேலூா் மாவட்டம் பழைய காட்பாடியை சோ்ந்தவா் தங்கராஜ் (50). இவரது மனைவி ராஜம்மாள் (42). இவா்களுக்கு திருமணமாகி 16 ஆண்டுகளாகிறது. ஆனால், குழந்தை இல்லையாம். இதனால் மன வேதனையில் இருந்து வந்துள்ளனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் இவா்களது வீடு திறக்கப் படவில்லை எனத் தெரிகிறது. சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினா் காட்பாடி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில், போலீஸாா் விரைந்து வந்து வீட்டின் கதவைத் திறந்து பாா்த்தபோது தங்கராஜ், ராஜம்மாள் இருவரும் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கியது தெரிய வந்தது. உடனடியாக போலீஸாா் சடலங்களை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்தச் சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில், குழந்தை இல்லாத ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது. எனினும், அவா்களது தற்கொலைக்கான காரணம் குறித்து தெளிவாகத் தெரியவில்லை. விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.