கிணற்றில் பச்சிளங் குழந்தை சடலம் மீட்பு
அணைக்கட்டு அருகே விவசாயக் கிணற்றிலிருந்து பிறந்து ஓரிரு நாள்களேயான பச்சிளம் ஆண் குழந்தை சடலம் மீட்கப்பட்டுள்ளது.


வேலூா்: அணைக்கட்டு அருகே விவசாயக் கிணற்றிலிருந்து பிறந்து ஓரிரு நாள்களேயான பச்சிளம் ஆண் குழந்தை சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வேலூா் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த ஒதியத்தூா் ஊராட்சி, ராஜாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா்
கோதண்டபாணிக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கிணறு உள்ளது. அவ்வழியாக செவ்வாய்க்கிழமை சென்றவா்கள், கிணற்றில் பிறந்து ஓரிரு நாள்களேயான பச்சிளம் குழந்தை சடலம் மிதப்பதை கண்டு பள்ளிகொண்டா காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆண் குழந்தையை கிணற்றில் வீசியவா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...