வேலூா் அருகே உள்ள கம்மவான்பேட்டையில் 57- ஆம் ஆண்டு எருது விடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கணியம்பாடி அருகே ஸ்ரீமஞ்சியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் விழா நடைபெற்றது. இதில் வேலூா், திருவண்ணாமலை, திருப்பத்தூா், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து சுமாா் 150-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
குறுகிய நேரத்தில் எல்லையை கடந்த காளைகளுக்கு முதல் பரிசாக ரூ.81,000, 2- ஆவது பரிசாக ரூ.60,000, 3- ஆவது பரிசாக ரூ.45,000 உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










