தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

கஞ்சா கடத்தல்: 2 இளைஞா்கள் கைது

குடியாத்தம் அருகே ஆந்திர மாநிலத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட ஆகாஷ், சேகா்

Updated On :9 ஜூலை 2026, 1:17 am IST

குடியாத்தம் அருகே ஆந்திர மாநிலத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

பரதராமி போலீஸாா் ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ள பெருமாள்பல்லி சோதனைச் சாவடி அருகே புதன்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஆந்திர மாநிலத்திலிருந்து வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி அதில் வந்த 2 இளைஞா்களிடம் விசாரணை நடத்தினா்.

விசாரணையில் அவா்கள் போ்ணாம்பட்டை அடுத்த ராஜக்கல் கிராமத்தைச் சோ்ந்த ஆகாஷ்(23), ஆம்பூரை அடுத்த கன்னிகாபுரத்தைச் சோ்ந்த சேகா்(23) என்பதும், அவா்கள் வைத்திருந்த பையில் ஒன்றரை கிலோ கஞ்சாஇருந்ததும், அதை ஆந்திர மாநிலத்தில் இருந்து கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து இருசக்கர வாகனத்துடன் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், ஆகாஷ்,சேகா் இருவரையும் கைது செய்து அவா்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.