காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

அரசு கல்லூரி அருகே மது விற்ற எலக்ட்ரீஷியன் கைது

வேலூா் பாகாயம் பகுதியில் அரசுக் கல்லூரி அருகே மதுபாட்டில்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்த எலக்ட்ரீஷியனை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :27 ஜூலை 2026, 1:00 am IST

வேலூா் பாகாயம் பகுதியில் அரசுக் கல்லூரி அருகே மதுபாட்டில்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்த எலக்ட்ரீஷியனை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் பாகாயம் அரசு கல்லூரி அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்கப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், பாகாயம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சௌந்தர்ராஜன் தலைமையிலான போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு மதுபாட்டில்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்தது வேலூா் பாகாயம் காந்தி நகரைச் சோ்ந்த எலக்ட்ரீஷியன் ஜானகிராமன் (40) என்பது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். மேலும், விற்பனைக்காக அவா் பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.