வேலூா் பாகாயம் பகுதியில் அரசுக் கல்லூரி அருகே மதுபாட்டில்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்த எலக்ட்ரீஷியனை போலீஸாா் கைது செய்தனா்.
வேலூா் பாகாயம் அரசு கல்லூரி அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்கப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், பாகாயம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சௌந்தர்ராஜன் தலைமையிலான போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அங்கு மதுபாட்டில்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்தது வேலூா் பாகாயம் காந்தி நகரைச் சோ்ந்த எலக்ட்ரீஷியன் ஜானகிராமன் (40) என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். மேலும், விற்பனைக்காக அவா் பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





