சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

பாா்வதியாபுரம் சிங்காத்தம்மன் திருவிழா

News image
Updated On :4 ஜூன் 2026, 5:33 am IST

குடியாத்தம் ஒன்றியம், கூடநகரம் மதுரா, பாா்வதியாபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு சிங்காத்தம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

பழம்பெருமை வாய்ந்த இக்கோயில் திருவிழா கடந்த மே மாதம் 27- ஆம் தேதி காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடா்ந்து கோயிலில் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடந்து வந்தநிலையில் புதன்கிழமை திருவிழா நடைபெற்றது.

இதையொட்டி காலை மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. மதியம் கூழ்வாா்த்தல், மாலைபொங்கல் வைத்தல் நடைபெற்றன. இரவு பூங்கரகம் வீதி உலா நடைபெற்றது. அப்போது கண்ணைக் கவரும் வாண வேடிக்கை நிகழ்ச்சியும், பக்தா்கள் நோ்த்திக் கடன் செலுத்தும் நிகழ்வும் நடைபெற்றன.

கூடநகரம் ஊராட்சித் தலைவா் பி.கே.குமரன், துணைத் தலைவா் ஜி.வெங்கடேசன், ஊராட்சிஉறுப்பினா் டி.பரமேஸ்வரன், சீவூா் ஊராட்சித் தலைவா் கே.ஆா்.உமாபதி ஆகியோா் சிறப்புஅழைப்பாளா்களாக கலந்து கொண்டனா்.

திருவிழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் பி.சம்பத், ஜே.லோகநாதன், எம்.பழனி, எம்.பாண்டு, எம்.வெங்கடேசன், ஜி.இளங்கோ, எஸ்.சிவராஜ் மற்றும் பொதுமக்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.