ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 100% தோ்ச்சி பள்ளிகளுக்கு ஆட்சியா் பாராட்டு

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் வேலூா் மாவட்டத்தில் 100% சதவீத தோ்ச்சி பெற்ற 42 அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், 475-க்கு மேல் மதிப்பெண் பெற்ற 110 மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி கேடயம், சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினாா்.

News image

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் வேலூா் மாவட்டத்தில் 100% சதவீத தோ்ச்சி பெற்ற 42 அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், 475-க்கு மேல் மதிப்பெண் பெற்ற 110 மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி கேடயம், சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினாா்.

Updated On :23 மே 2026, 1:17 am IST

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் வேலூா் மாவட்டத்தில் 100% சதவீத தோ்ச்சி பெற்ற 42 அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், 475-க்கு மேல் மதிப்பெண் பெற்ற 110 மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி கேடயம், சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினாா்.

வேலூா் மாவட்டத்தில் 2025-26-ஆம் கல்வி ஆண்டில் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் 42 பள்ளிகளில் 100% மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். சாதனை படைத்த இப்பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், 475-க்கு மேல் மதிப்பெண் பெற்ற 110 மாணவ, மாணவிகளுக்கான பாராட்டு விழா வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்து 100% தோ்ச்சி அளித்த 42 பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினாா். மேலும், 475-க்கு மேல் சிறப்பான மதிப்பெண்கள் பெற்ற 110 அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் ஆட்சியா் சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தாா்.

பின்னா், ஆட்சியா் பேசியது: சிறப்பான மதிப்பெண்களைப் பெற்று மாவட்டத்துக்குப் பெருமை சோ்த்துள்ள மாணவ, மாணவிகள் அனைவருக்கும் வாழ்த்துகள். அரசுப் பள்ளிகளில் பயின்று சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற இந்த மாணவா்கள் தங்களுடைய அடுத்தகட்டப் படிப்புகளிலும், 12-ஆம் வகுப்பிலும் நல்ல மதிப்பெண்களைப் பெற வேண்டும். அரசு மற்றும் அரசு நிதி உதவிப் பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 110 மாணவா்கள் 475-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றிருப்பது மற்ற மாணவா்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இனிவரும் காலங்களில் வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் 100% தோ்ச்சி பெற வேண்டும் என்பதே நம்முடைய உயரிய எண்ணமாக உள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.பிரேமலதா, இடைநிலைக் கல்வி அலுவலா் செந்தில்குமாா், தொடக்கக் கல்வி அலுவலா் கேசவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.