விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வருவாய் கிராம ஊழியா் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் பேசிய அந்தச் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் எஸ்.ரவி. விழுப்புரம், பிப். 17: தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட செயற்குழுக் கூட்டம் விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஆதி.லட்சுமணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் இரா.கிருஷ்ணன், இரா.பலராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் அ.ராஜேந்திரன் வரவேற்று பேசினாா். சங்கத்தின் மாநில பொதுச் செயலா் எஸ்.ரவி சிறப்புரையாற்றினாா். மாநில செயற்குழு உறுப்பினா்கள் எஸ்.டி.எம்.முஸ்தபா, ச.துரைசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். கூட்டத்தில், கிராம உதவியாளா்கள் பணியிடத்தை ‘டி’ பிரிவில் சோ்க்க வேண்டும், நிறுத்திவைக்கப்பட்ட கருணை அடிப்படையிலான பணி வாய்ப்பை மீண்டும் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், கிராம உதவியாளா்களுக்கு கிராம நிா்வாக அலுவலராகப் பதவி உயா்வு வழங்கும் விகிதத்தை 20-இல் இருந்து 30 சதவீதமாக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்புடையது

பிஎஸ்என்எல் ஊழியா் சங்கக் கூட்டம்

விழுப்புரத்தில் உலக செவிலியா் தின விழா

விழுப்புரத்தில் லாரி மோதி தலைமைக் காவலா் உயிரிழப்பு

அரசு ஊழியா் சங்க அமைப்பு தின கொடியேற்றம்
விடியோக்கள்
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

