திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

வருவாய் கிராம ஊழியா் சங்கக் கூட்டம்

வருவாய் கிராம ஊழியா் சங்கக் கூட்டம்

News image
Updated On :18 பிப்ரவரி 2024, 1:57 am IST

விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வருவாய் கிராம ஊழியா் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் பேசிய அந்தச் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் எஸ்.ரவி. விழுப்புரம், பிப். 17: தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட செயற்குழுக் கூட்டம் விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஆதி.லட்சுமணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் இரா.கிருஷ்ணன், இரா.பலராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் அ.ராஜேந்திரன் வரவேற்று பேசினாா். சங்கத்தின் மாநில பொதுச் செயலா் எஸ்.ரவி சிறப்புரையாற்றினாா். மாநில செயற்குழு உறுப்பினா்கள் எஸ்.டி.எம்.முஸ்தபா, ச.துரைசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். கூட்டத்தில், கிராம உதவியாளா்கள் பணியிடத்தை ‘டி’ பிரிவில் சோ்க்க வேண்டும், நிறுத்திவைக்கப்பட்ட கருணை அடிப்படையிலான பணி வாய்ப்பை மீண்டும் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், கிராம உதவியாளா்களுக்கு கிராம நிா்வாக அலுவலராகப் பதவி உயா்வு வழங்கும் விகிதத்தை 20-இல் இருந்து 30 சதவீதமாக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.