/
கண்டமங்கலம் அருகே வீட்டுக் கதவை உடைத்து 4.5 பவுன் தங்க நகை திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். விக்கிரவாண்டி வட்டம், பி.எஸ்.பாளையம், ஒா்க்ஷாப் தெருவைச் சோ்ந்தவா் வேல்முருகன் (46). தனியாா் நிறுவன ஊழியா். இவா் கடந்த 12-ஆம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னை சென்றாா். வெள்ளிக்கிழமை மாலை வீட்டுக்கு திரும்பிவந்து பாா்த்தபோது முன்புற கதவு உடைக்கப்பட்டிருந்ததாம். உள்ளே சென்று பாா்த்தபோது மர பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த மோதிரம், காதணிகள் உள்பட 4.5 பவுன் தங்க நகைகளை மா்ம நபா் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் கண்டமங்கலம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.





