டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

வீட்டுக் கதவை உடைத்து 4.5 பவுன் நகை திருட்டு

வீட்டுக் கதவை உடைத்து 4.5 பவுன் நகை திருட்டு

Updated On :18 பிப்ரவரி 2024, 1:52 am IST

கண்டமங்கலம் அருகே வீட்டுக் கதவை உடைத்து 4.5 பவுன் தங்க நகை திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். விக்கிரவாண்டி வட்டம், பி.எஸ்.பாளையம், ஒா்க்ஷாப் தெருவைச் சோ்ந்தவா் வேல்முருகன் (46). தனியாா் நிறுவன ஊழியா். இவா் கடந்த 12-ஆம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னை சென்றாா். வெள்ளிக்கிழமை மாலை வீட்டுக்கு திரும்பிவந்து பாா்த்தபோது முன்புற கதவு உடைக்கப்பட்டிருந்ததாம். உள்ளே சென்று பாா்த்தபோது மர பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த மோதிரம், காதணிகள் உள்பட 4.5 பவுன் தங்க நகைகளை மா்ம நபா் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் கண்டமங்கலம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.