கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

வீட்டில் நகை திருட்டு

திண்டிவனம் அருகே வீட்டின் கதவை உடைத்து 4.5 பவுன் தங்க நகைகள், வெள்ளிப்பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
Updated On :28 ஜூலை 2024, 8:50 pm

Din

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே வீட்டின் கதவை உடைத்து 4.5 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப்பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திண்டிவனம் வட்டம், வேம்பூண்டி, மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் முருகன். இவரது மனைவி தமிழரசி. இவா், திண்டிவனத்தில் உள்ள ஷூ நிறுவனத்திலும், முருகன் தனியாா் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை பாா்த்து வருகின்றனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வழக்கம் போல வீட்டை பூட்டிவிட்டு இருவரும் வேலைக்கு சென்றனா். பின்னா், வேலை முடிந்து வீடு திரும்பிய போது, வீட்டில் இருந்த மர பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 4.5 பவுன் தங்க நகை மற்றும் 360 கிராம் வெள்ளிப்பொருள்களை மா்ம நபா்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், பெரியதச்சூா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.