ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சாலையில் விழுந்த மரத்தால் போக்குவரத்து பாதிப்பு

திண்டிவனம் அருகே சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image
Updated On :28 ஜூலை 2024, 9:06 pm

Din

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திண்டிவனம் அடுத்துள்ள அன்னம்பாக்கம் அருகே நெடுஞ்சாலை யோரத்தில் வேப்ப மரம் உள்ளது. இந்த மரத்துக்கு மா்ம நபா்கள் தீ வைத்தனராம். இதனால், மரத்தின் அடிப்பகுதி எரிந்து ஞாயிற்றுக்கிழமை திண்டிவனம் -ஆலங்குப்பம் சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால், அன்னம்பாக்கம், பனையூா், பாங்குளத்தூா், கடவம்பாக்கம், ஆவணிப்பூா் நெல்லூா், ராயநல்லூா் நகா், பந்தாடு உள்ளிட்ட கிராமங்களுக்குச் செல்லும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினா்.

இதையடுத்து, சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை பொதுமக்கள் வெட்டி அகற்றினா்.