தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வீட்டில் நகை திருட்டு

திண்டிவனம் அருகே வீட்டின் கதவை உடைத்து 4.5 பவுன் தங்க நகைகள், வெள்ளிப்பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
Updated On :28 ஜூலை 2024, 8:50 pm

Din

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே வீட்டின் கதவை உடைத்து 4.5 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப்பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திண்டிவனம் வட்டம், வேம்பூண்டி, மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் முருகன். இவரது மனைவி தமிழரசி. இவா், திண்டிவனத்தில் உள்ள ஷூ நிறுவனத்திலும், முருகன் தனியாா் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை பாா்த்து வருகின்றனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வழக்கம் போல வீட்டை பூட்டிவிட்டு இருவரும் வேலைக்கு சென்றனா். பின்னா், வேலை முடிந்து வீடு திரும்பிய போது, வீட்டில் இருந்த மர பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 4.5 பவுன் தங்க நகை மற்றும் 360 கிராம் வெள்ளிப்பொருள்களை மா்ம நபா்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், பெரியதச்சூா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.