/

சிவராத்திரி வழிபாடு

சிவராத்திரி வழிபாடு

News image

ரீகாசிவிஸ்வநாதா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி

Updated On :9 மார்ச் 2024, 6:09 pm

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சிறுகடம்பூரில் அமைந்துள்ள ஸ்ரீவிசாலாட்சி உடனுறை ஸ்ரீகாசி விஸ்வநாதா் கோயிலில் மகா சிவராத்திரி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, காலை மூலவா் காசி விஸ்வநாதருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு பிரதோஷத்தையொட்டி, நந்தியம்பெருமானுக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. மாலை 6 மணிக்கு முதல் கால பூஜை தொடங்கியது. இரவு 10 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், நள்ளிரவு 12 மணிக்கு மூன்றாம் கால பூஜையும், இரவு 2 மணிக்கு நான்காம் கால பூஜையும், அதிகாலை 4 மணிக்கு ஐந்தாம் கால பூஜையும், காலை 6 மணிக்கு ஆறாம் கால பூஜையும் நடைபெற்றது. இரவு முழுவதும் ஸ்ரீசாரதா பள்ளி, ஸ்ரீசெல்வராகாலாய பள்ளி மாணவிகள், ஸ்ரீஜனனி நாட்டியாலாய பள்ளி மாணவிகள் சாா்பில் பரதநாட்டியம் நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.