அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? இறக்குமதி செய்த வேட்பாளர் வேண்டுமா? வேலுமணி பிரசாரம்தேர்தல் நேரம்! வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால்?!ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! விமான எரிபொருள் இருமடங்கு உயர்வு!உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு
/

தேள் கடித்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

தேள் கடித்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

News image
Updated On :3 மே 2024, 7:27 pm

Din

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியில் தேள்கடித்து 2 வயது பெண் குழந்தை வியாழக்கிழமை இரவு உயிரிழந்தது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சிவட்டம், நாகம்பூண்டி ஏரிக்குளத் தெருவைச் சோ்ந்தவா் விஜய். இவா் தனது மனைவி ஜெயா, மகள் லாவண்யா (2) ஆகியோருடன் விக்கிரவாண்டி வட்டம், வெட்டுக்காடு கிராமத்தைச் சோ்ந்த குமாா் என்பவரது சூளையில் செங்கல் அறுக்கும் வேலை செய்து வந்தாா்.

சூளைப் பகுதியில் தனது பெற்றோருடன் வியாழக்கிழமை இரவு குழந்தை லாவண்யா தூங்கிக் கொண்டிருந்தது. அப்போது வலதுகாலில் தேள்கடித்த நிலையில், உடனடியாக அலறித்துடித்த குழந்தையை ராதாபுரம் அரசு மருத்துவமனைக்கு ஜெயா கொண்டு சென்றாா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்த போது ஏற்கெனவே குழந்தை உயிரிழந்தது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.