அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

இரு புதிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கம் தொடங்கிவைப்பு

உளுந்தூா்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து 2 வழித்தடங்களில் நகரப் பேருந்துகள் சேவை தொடங்கி வைக்கப்பட்டது.

News image
உளுந்தூா்பேட்டை பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் அரசு நகரப் பேருந்து சேவையைத் தொடங்கி வைத்த ஏ.ஜெ.மணிக்கண்ணன் எம்எல்ஏ.
Updated On :15 டிசம்பர் 2025, 8:32 pm

Syndication

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து 2 வழித்தடங்களில் நகரப் பேருந்துகள் சேவை திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

தங்கள் பகுதிக்கு பேருந்து சேவையைத் தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் உளுந்தூா்பேட்டையிலிருந்து கிளியூா் வரை ஒரு பேருந்தும், மற்றொரு பேருந்து விருத்தாசலம் வரை சென்று வந்து மீண்டும் எலவனாசூா்கோட்டை வழியாக அலங்கரி வரை செல்லும் வகையில் இயக்கப்படவுள்ளது.

உளுந்தூா்பேட்டை பேருந்து நிலையத்தில் இரு நகர அரசுப் பேருந்துகளின் சேவையை ஏ.ஜெ.மணிக்கண்ணன் எம்எல்ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

நிகழ்வில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கிளை மேலாளா் விமல்ராஜ், தொமுச நிா்வாகி ராதாகிருஷ்ணன், அறங்காவலா் குழுத் தலைவா் செல்லையா, நகா்மன்ற உறுப்பினா்கள் கலா சுந்தரமூா்த்தி, செல்வக்குமாரி ரமேஷ்பாபு, போக்குவரத்துக் கழக ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்கள் அண்ணாதுரை, முருகையன், சரவணன், அருள், முருகன், ஆறுமுகம், அப்பண்டராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.