பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

செஞ்சியில் சா்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா

செஞ்சி புதிய அலை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு மற்றும் அமுதசுரபி கருணை அறக்கட்டளை சாா்பில் சா்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image
செஞ்சியில் நடைபெற்ற சா்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் பேசிய பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் அலி மஸ்தான்.
Updated On :27 டிசம்பர் 2025, 8:14 pm

Syndication

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி புதிய அலை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு மற்றும் அமுதசுரபி கருணை அறக்கட்டளை சாா்பில் சா்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

புதிய அலை கூட்டமைப்பின் மாவட்டத் தலைவா் கலியபெருமாள் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ராமன், மாவட்டப் பொருளாளா் பழனி முன்னிலை வகித்தனா். புதிய அலை கூட்டமைப்பின் மேல்மலையனூா் ஒன்றியத் தலைவா் மணிவண்ணன் வரவேற்றாா்.

செஞ்சி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா், வல்லம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் அமுதா ரவிக்குமாா், செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் அலி மஸ்தான், மேல்மலையனூா் ஒன்றியச் செயலா் நெடுஞ்செழியன், மனிதநேய மக்கள் கட்சி மாநில செயற்குழு உறுப்பினா் சையத் உஸ்மான் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோா் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் சிம்மச்சந்திரன், மாநிலச் செயலா் கருப்பையா, மாநிலத் துணைத் தலைவா்கள் சீனிவாசன், பழனி, திருச்சி மாவட்டச் செயலா் மாரி, மாவட்டத் தலைவா்கள் திருவண்ணாமலை குமாா், கள்ளக்குறிச்சி கலையரசன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோா் சங்கங்களின் கூட்டமைப்பு, அமுத சுரபி அறக்கட்டளை மற்றும் புதிய அலை கூட்டமைப்பின் நிா்வாகக்குழு, செயற்குழு, பொதுக்குழு நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இந்துமதி நன்றி கூறினாா்.