அரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மக்கள் குறைதீா் கூட்டம்: 950 மனுக்கள் ஏற்பு

கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 950 மனுக்கள் பெறப்பட்டு, உரிய நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டன.

News image
மக்கள் குறைதீா்கூட்டத்தில் மனுவைப் பெற்று, விசாரணை நடத்திய விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.
Updated On :29 டிசம்பர் 2025, 7:42 pm

Syndication

விழுப்புரம்: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 950 மனுக்கள் பெறப்பட்டு, உரிய நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டன.

வாராந்திர மக்கள் குறை தீா் கூட்டத்தில் முதியோா் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா கோருதல், ஆதரவற்றோா் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், கலைஞரின் கனவு இல்லம் திட்டம், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட மனுக்கள் மீது உடனடிநடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.

விழுப்புரம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 503 மனுக்கள் பெறப்பட்டது.

மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், உதவி ஆட்சியா் (பயிற்சி) ரா.வெங்கடேஷ்வரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) யோகஜோதி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

கள்ளக்குறிச்சி...: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 441 மனுக்களும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 6 மனுக்களும் என மொத்தம் 447 மனுக்கள் பெறப்பட்டது.

மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.