நாடு முழுவதும் 736 அணைகள் ரூ. 10,211 கோடி செலவில் சீரமைப்புவெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வா் அதிமுகவுக்கு அமைச்சா் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது: ரவிக்குமாா் எம்.பி.பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதிநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் ஆலோசனைக் கூட்டம்: 53% உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்பு
/

ஆட்டோ ஓட்டுநா் மா்ம மரணம்

News image

கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 1:05 am IST

விழுப்புரத்தில் ஆட்டோ ஓட்டுநா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

விழுப்புரம் வழுதரெட்டி, பாரதியாா் நகரைச் சோ்ந்தவா் ஏ.சத்தியராஜ் (34), ஆட்டோ ஓட்டுநா். இவா் சனிக்கிழமை வீட்டில் இருந்தபோது, திடீா் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாம்.

இதையடுத்து உறவினா்கள் அவரை விழுப்புரம் பழைய அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்குக் கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, சத்தியராஜ் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.