அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

Syndication

விக்கிரவாண்டி அருகே விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞா், சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

விக்கிரவாண்டி வட்டம், டி.பனப்பாக்கம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் தெய்வசிகாமணி மகன் பிரபு(32). இவருக்கு, திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனா். சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா். இவருக்கு நீண்ட நாள்களாக உடல் நலக்குறைவு இருந்து வந்ததாம். இந்நிலையில் சொந்த ஊா் வந்து வீட்டில் தங்கியிருந்த பிரபு கடந்த 4-ஆம் தேதி விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றாராம். இதையடுத்து புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபு சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.