இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

1,152 போதை மாத்திரைகள் பறிமுதல்: இளைஞா் கைது

விழுப்புரத்தில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்த வெளி மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.

News image
Updated On :13 ஜனவரி 2026, 8:15 pm

Syndication

விழுப்புரத்தில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்த வெளி மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா். மேலும், அவா் வசமிருந்த கஞ்சா மற்றும் 1,152 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.

விழுப்புரம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் செல்வவிநாயகம், உதவி ஆய்வாளா் லியோ சாா்லஸ் மற்றும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை விழுப்புரம் புறவழிச் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அங்குள்ள உணவகம் அருகே சந்தேகிக்கும்படி நின்றிருந்த இளைஞரை பிடித்து சோதனை செய்தபோது, அவரது கைப்பையில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.

பின்னா் போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா், மேற்கு வங்க மாநிலம், பா்கனாஸ் பகுதியைச் சோ்ந்த அ.ஹலீம் முல்லா (26) என்பதும், இவா் விழுப்புரம் பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, ஹலீம் முல்லாவை கைது செய்து சிறையிலடைத்தனா். மேலும், அவா் வசமிருந்த 60 கிராம் கஞ்சா, வலி நிவாரணியாக பயன்படுத்தப்படும் 1,152 போதை மாத்திரைகள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.