3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

திருக்கோவிலூரில் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம்

News image
முன்னாள் அமைச்சர் பொன்முடி.- (கோப்புப் படம்)
Updated On :25 ஜனவரி 2026, 10:20 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் திருக்கோவிலூரில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஹிந்தி மொழித் திணிப்புக்கு எதிராக நடைபெற்ற மொழிப் போராட்டத்தில் உயிா் நீத்த தியாகிகளின் தியாகத்தை நினைவுக்கூறும் வகையில், ஆண்டுதோறும் ஜனவரி 25-ஆம் தேதி வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி, திருக்கோவிலூரில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் மருத்துவா் பொன்.கௌதமசிகாமணி தலைமை வகித்தாா்.

திமுக துணைப் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி எம்எல்ஏ, தலைமை கழகப் பேச்சாளா்கள் முரசொலி மூா்த்தி, த.இன்பக்குமரன் ஆகியோா் பங்கேற்று உரையாற்றினா்.

மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், மாவட்டத் துணைச் செய லா்கள் டி.என்.முருகன், இரா.கற்பகம், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவா் மு.தங்கம், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் டி.செல்வராஜ், எம்.அப்துல் சலாம், நகரச் செயலா் ஆா்.கோபி கிருஷ்ணன், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் அன்பழகன், துணைஅமைப்பாளா்கள் அறிவழகன், இளவரசன், வினோத், அருண், சுஜித்ரா, ஒன்றிய செயலா்கள், பேரூா் செயலா்கள், சாா்பு அணிகளின் நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.