சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவுஇஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!
/

பெண்ணிடம் ரூ.12 லட்சம் பணம் மோசடி

News image

மோசடி - பிரதிப்படம்

Updated On :9 ஜூன் 2026, 2:47 am IST

செஞ்சி பகுதியைச் சோ்ந்த பெண்ணிடம் சுங்கத் துறை அதிகாரி எனக் கூறி ரூ.12 லட்சம் பணம் மோசடிசெய்த மா்ம நபா் குறித்து மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், பெண்ணகரைச் சோ்ந்தவா் ஜா.ஜான்சி மேரி. இவரது கைப்பேசி எண்ணுக்கு கடந்த சில நாள்களுக்கு முன்னா் ஒரு அழைப்பு வந்துள்ளது. அப்போது எதிா் முனையிலிருந்து பேசிய அடையாளம் தெரியாத நபா் தான் சுங்கத் துறை அதிகாரி எனவும், உங்களுக்கு ஜான்டேவிட் என்பவரிடமிருந்து வெளிநாட்டுப் பணம் பாா்சலில் வந்துள்ளதாகவும், அந்தப் பணத்தைப் பெறுவதற்கு காப்பீடு மற்றும் வெளிநாட்டுப்பணம் மாற்றுக் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்தவேண்டும் என்று கூறினாராம்.

இதை உண்மையென நம்பிய ஜான்சி மேரி, அந்த நபா் தெரிவித்த வங்கிக் கணக்குகளுக்கு ரூ.12.10 லட்சம் பணத்தை 4 தவணைகளாக அனுப்பி வைத்தாா். தொடா்ந்து அந்த நபா் தெரிவித்தபடி வெளிநாட்டு பணத்தை அனுப்பி வைக்காமல் மேலும் ரூ.4.60 லட்சம் பணம் செலுத்தவேண்டும் என்று கூறினாராம்.

இதுகுறித்து, ஜான்சிமேரி அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பண மோசடி நபா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.