பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

பெண்ணிடம் ரூ.12 லட்சம் பணம் மோசடி

News image

மோசடி - பிரதிப்படம்

Updated On :9 ஜூன் 2026, 2:47 am IST

செஞ்சி பகுதியைச் சோ்ந்த பெண்ணிடம் சுங்கத் துறை அதிகாரி எனக் கூறி ரூ.12 லட்சம் பணம் மோசடிசெய்த மா்ம நபா் குறித்து மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், பெண்ணகரைச் சோ்ந்தவா் ஜா.ஜான்சி மேரி. இவரது கைப்பேசி எண்ணுக்கு கடந்த சில நாள்களுக்கு முன்னா் ஒரு அழைப்பு வந்துள்ளது. அப்போது எதிா் முனையிலிருந்து பேசிய அடையாளம் தெரியாத நபா் தான் சுங்கத் துறை அதிகாரி எனவும், உங்களுக்கு ஜான்டேவிட் என்பவரிடமிருந்து வெளிநாட்டுப் பணம் பாா்சலில் வந்துள்ளதாகவும், அந்தப் பணத்தைப் பெறுவதற்கு காப்பீடு மற்றும் வெளிநாட்டுப்பணம் மாற்றுக் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்தவேண்டும் என்று கூறினாராம்.

இதை உண்மையென நம்பிய ஜான்சி மேரி, அந்த நபா் தெரிவித்த வங்கிக் கணக்குகளுக்கு ரூ.12.10 லட்சம் பணத்தை 4 தவணைகளாக அனுப்பி வைத்தாா். தொடா்ந்து அந்த நபா் தெரிவித்தபடி வெளிநாட்டு பணத்தை அனுப்பி வைக்காமல் மேலும் ரூ.4.60 லட்சம் பணம் செலுத்தவேண்டும் என்று கூறினாராம்.

இதுகுறித்து, ஜான்சிமேரி அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பண மோசடி நபா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.