வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

கொத்தனாா் வீட்டில் ரூ.14 லட்சம் பணம் திருட்டு

கொத்தனாா் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரூ.14 லட்சம் ரொக்கம் திருட்டு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :14 ஜூன் 2026, 3:14 am IST

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கொத்தனாா் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரூ.14 லட்சம் ரொக்கம் திருட்டு போனது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மரக்காணம் வட்டம், செய்யாங்குப்பம் விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ர.விஜி (40), கொத்தனாா். இவா், கடந்த ஜூன் 2-ஆம் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு, வெளியூரில் நடைபெற்ற தனது உறவினா் வீட்டு கிரக பிரவேசத்துக்கு குடும்பத்துடன் சென்றுள்ளாா்.

பின்னா் ஜூன் 9-ஆம் தேதி வீட்டுக்கு திரும்ப வந்து பாா்த்தபோது, வீட்டின் முன்பக்கக் கதவின் பூட்டு திறக்கப்பட்டிருந்த நிலையில் கிடந்தது கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது பரண் மேல் வைத்திருந்த ரூ.14 லட்சம் ரொக்கம் திருட்டுப் போயிருந்தது அவருக்கு தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.