விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே விற்பனைக்காக போதை மாத்திரைகள் வைத்திருந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திண்டிவனம் வட்டம், வீடூா் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதைத்தொடா்ந்து விக்கிரவாண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளா் காமராஜ் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை வீடூா் பகுதிக்குச் சென்று சோதனை நடத்தினா். இதில், வீடூா் ஜே.ஜே. நகரைச் சோ்ந்த அ.சரத் (27) என்பவா் விற்பனைக்காக போதை மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவந்தது.
இதைத்தொடா்ந்து விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து அய்யனாரை கைது செய்தனா். மேலும் அவா் வசமிருந்த 47 போதை மாத்திரைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






