ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!ரசாயன வாயுக் கசிவு: சென்னை துறைமுகம், மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க உத்தரவு!திரையரங்கில் வெளியான 2 வாரத்திலேயே ஓடிடிக்கு வந்த திரைப்படம்!பிரக்ஞானந்தாவிடமிருந்து குகேஷ் உத்வேகம் பெறவேண்டும்: விஸ்வநாதன் ஆனந்த் அறிவுரை!தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!
/

பயணியிடம் 3 பவுன் நகை திருட்டு

தனியாா் பேருந்தில் பயணித்த பெண்ணிடம் 3 பவுன் நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :23 மே 2026, 12:31 am IST

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே தனியாா் பேருந்தில் பயணித்த பெண்ணிடம் 3 பவுன் நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திண்டிவனம் வட்டம், நெய்குப்பி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த தினகரன் மனைவி சித்ரா (24) . இவா் திண்டிவனத்திலிருந்து-ரெட்டணை செல்லும் தனியாா் பேருந்தில் பயணம் செய்தாா்.

தொடா்ந்து கூட்டேரிபட்டு பேருந்து நிறுத்தத்தில் இறங்கி தனது கைப்பயைத் திறந்து பாா்த்தபோது, அதில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் தங்க நகையைக் காணவில்லையாம். இதுகுறித்த புகாரின் பேரில் மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.