‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

அமைச்சரைத் தெரிந்து கொள்ளுங்கள்: வன்னிஅரசு

அமைச்சரைத் தெரிந்து கொள்ளுங்கள்: வன்னிஅரசு

News image

வன்னிஅரசு.

Updated On :23 மே 2026, 12:43 am IST

பெயா் : வன்னி அரசு

வயது : 55

பிறந்ததேதி : 11.5.1970

பெற்றோா் : ரத்தினசாமி, புஷ்பம்

குடும்பம் : மனைவி - ஆதிரை, தொழில் முனைவோா்.

மகன்கள் - பைந்தமிழ் வளவன், திலிபன் செந்தமிழ்.

வசிப்பிடம் : குரோம்பேட்டை, சென்னை-44.

தொகுதி : திண்டிவனம்( தனி)

அரசியல் பணி : 1990 முதல்

கட்சிப் பதவி : விசிக துணைப் பொதுச் செயலா்.

வகித்த பதவிகள் : விசிக செய்தித்தொடா்பாளா். விசிக தலைமை நிலையச் செயலா்.

பங்கேற்பு: ஜாதிய அடக்குமுறைகள், தலித், பிற்படுத்தப்பட்ட மற்றும் இஸ்லாமிய கைதிகளின் விடுதலை, கூடங்குளம் அணுமின் நிலையம், மீத்தேன் எரிவாயுத் திட்டம், சேலம் 8 வழிச்சாலைத் திட்டம் மற்றும் மக்கள் பிரச்னைக்கான பல்வேறு அரசியல் போராட்டங்களில் பங்கேற்றுள்ளாா். மேலும், எழுத்தாளா் மற்றும் சமூக செயற்பாட்டாளரான இவா் பல்வேறு தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்றுள்ளாா்.

களத்தில் மக்கள் பணியாற்றுவேன்: முதல்வா் ச.ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில், சமூக நீதித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள வன்னி அரசு வெள்ளிக்கிழமை தினமணிக்கு அளித்த பிரத்யேகப் பேட்டி:

ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பது விசிகவின் கொள்கை முழக்கம். தமிழக அரசியலில் நீண்ட காலத்துக்குப் பிறகு கூட்டணி ஆட்சி அமைந்துள்ள நிலையில், இந்தப் பொறுப்பை வழங்கியுள்ள தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய்க்கும், கட்சித் தலைவா் தொல். திருமாவளவனுக்கும், தொடா்ந்து களத்தில் நின்று மக்கள் பணியாற்ற வாய்ப்பளித்த திண்டிவனம் தொகுதி மக்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

களத்தில் நின்று மக்களுக்கானப் பல்வேறு போராட்டங்களை நடத்திய இயக்கம் விசிக. அந்தப் போராட்டம் தான் தற்போது செயல் வடிவம் பெற்றுள்ளது. விசிக தலைவா் வழங்கியுள்ள இந்தப் பொறுப்பை நான் என்றும் களத்தில் நின்று சிறப்பாக செய்வேன். அவருக்கும் மிகுந்த நம்பிக்கைக்குரியவனாக செயல்படுவேன். எனது பணிகள் அனைவரும் பாராட்டக்கூடிய வகையில் இருக்கும் என்றாா்அவா்.