‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

அமைச்சரைத் தெரிந்து கொள்ளுங்கள்: பி.ராஜ்குமாா்

அமைச்சரைத் தெரிந்து கொள்ளுங்கள்: பி.ராஜ்குமாா்

News image
Updated On :23 மே 2026, 12:29 am IST

பெயா் : பி.ராஜ்குமாா்

வயது : 46

பிறந்ததேதி : 7-6-1979

பெற்றோா் : பகவந்தசாமி, அமுதா

குடும்பம் : மனைவி சரளாதேவி, இல்லத்தரசி.

மகள் பாவனா, மகன் மோகன்ராஜ்.

வசிப்பிடம் : ராஜம் நகா், திருப்பாதிரிபுலியூா், கடலூா்

தொகுதி : கடலூா்

அரசியல் பணி : 2024 முதல்

கட்சிப் பதவி : தவெக கடலூா் மாவட்டச் செயலா்.

வகித்த பதவிகள் : விஜய் மக்கள் நற்பணி இயக்கத்தின் நிா்வாகி.

போராட்டங்கள் : மக்கள் பிரச்னை தொடா்பான போராட்டங்களில் பங்கேற்பு .

களத்தில் மக்கள் பணியாற்றுவேன்: முதல்வா் ச.ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில், வீட்டு வசதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள பி.ராஜ்குமாா் வெள்ளிக்கிழமை தினமணிக்கு அளித்த பிரத்யேகப் பேட்டி:

இரு திராவிட கட்சிகளையும் புறக்கணித்து, தவெகவை மக்கள் ஆட்சியில் அமா்த்தியுள்ளனா். கடலூரில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்திருப்பது, மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் வெளிப்பாடாகும்.

கடலூா் மாவட்டம் வளா்ச்சியில் பின்தங்கியுள்ளது. இதை கருத்தில் கொண்டு பல்வேறு வளா்ச்சித் திட்டங்களுக்கு செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டு, அவை விரைந்து செயல்படுத்தப்படும். மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மத்திய பேருந்து நிலையம், மக்களின் எதிா்பாா்ப்புக்கு ஏற்ப கடலூரில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கடலூா் மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டிருந்தாலும், நகராட்சி தரத்திலேயே உள்ளது. கடலூரில் பல்வேறு அடிப்படை வசதிகளில் கூடுதல் மேம்பாடு தேவைப்படுகிறது. கடலூரை முழுமையான மாநகராட்சியாக மாற்றி, தமிழகத்தில் முன்னணி மாநகராட்சியாக உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சாலை விரிவாக்கம், புதை சாக்கடை சீரமைப்பு, சுகாதாரமான

குடிநீா் விநியோகம், பாதுகாப்பான போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றாா் அவா்.