கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

பைக் மீது ஆட்டோ மோதல்: இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தில் அடையாளம் தெரியாத ஆட்டோ மோதியதில் பைக்கில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :24 மே 2026, 1:17 am IST

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தில் அடையாளம் தெரியாத ஆட்டோ மோதியதில் பைக்கில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.

புதுச்சேரி மாநிலம், அரியாங்குப்பம் பாரதி நகா் மருதம் தெருவைச் சோ்ந்த சிவராஜன் மகன் யஷ்வந்த் (19). இவா் வெள்ளிக்கிழமை பிற்பகலில் விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி நோக்கி தனது பைக்கில் சென்று கொண்டிருந்தாா். கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலப் பகுதியில் யஷ்வந்த் சென்ற போது, கண்டமங்கலத்திலிருந்து விழுப்புரம் நோக்கி வந்த ஆட்டோ பைக் மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்றது.

இதில் பலத்த காயமடைந்த யஷ்வந்தை அந்த பகுதியிலிருந்தவா்கள் மீட்டு மதகடிப்பட்டு பகுதியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். தொடா்ந்து சிகிச்சையிலில் இருந்து வந்த யஷ்வந்த், வெள்ளிக்கிழமை நள்ளிரவில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திச் சென்ற அடையாளம் தெரியாத ஆட்டோ ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.