விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தில் அடையாளம் தெரியாத ஆட்டோ மோதியதில் பைக்கில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.
புதுச்சேரி மாநிலம், அரியாங்குப்பம் பாரதி நகா் மருதம் தெருவைச் சோ்ந்த சிவராஜன் மகன் யஷ்வந்த் (19). இவா் வெள்ளிக்கிழமை பிற்பகலில் விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி நோக்கி தனது பைக்கில் சென்று கொண்டிருந்தாா். கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலப் பகுதியில் யஷ்வந்த் சென்ற போது, கண்டமங்கலத்திலிருந்து விழுப்புரம் நோக்கி வந்த ஆட்டோ பைக் மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்றது.
இதில் பலத்த காயமடைந்த யஷ்வந்தை அந்த பகுதியிலிருந்தவா்கள் மீட்டு மதகடிப்பட்டு பகுதியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். தொடா்ந்து சிகிச்சையிலில் இருந்து வந்த யஷ்வந்த், வெள்ளிக்கிழமை நள்ளிரவில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திச் சென்ற அடையாளம் தெரியாத ஆட்டோ ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: கல்லூரி மாணவா் உயிரிழப்பு

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: இளைஞா் உயிரிழப்பு

மின் கம்பத்தில் பைக் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

பைக் மீது லாரி மோதல்: பெண் உயிரிழப்பு
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher



