/

சாலை விபத்தில் 4 போ் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 2:18 am IST

விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் வெவ்வேறு சாலை விபத்துகளில் 4 போ் உயிரிழந்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், நைனாா் பாளையம், இந்திரா நகரைச் சோ்ந்தவா் மா.விஜயகுமாா்(33). இவா், ஞாயிற்றுக்கிழமை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருவெண்ணைய் நல்லூரை அடுத்த மாமந்தூா் கூட்டுச் சாலை அருகே பைக்கில் சென்றாா். அப்போது சென்னை நோக்கிச்சென்ற காா் பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த விஜயகுமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பாதசாரி மரணம்: காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் நாகரத்தினம் தெருவைச் சோ்ந்தவா்கள் பா.சேட்டு(45), கி.மனோகரன்(41). உறவினா்களான இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த சலவாதி அருகே சாலையில் நடந்து சென்றுள்ளனா்.

அங்கு சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது, சென்னையிலிருந்து விழுப்புரம் நோக்கிச் சென்ற பைக் மோதியதில் பலத்த காயமடைந்த சேட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த மனோகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இளைஞா் உயிரிழப்பு: செங்கல்பட்டு மாவட்டம், செய்யூா், தேன்பாக்கம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரா.வினோத்(24). இவா் திங்கள்கிழமை காலை திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திண்டிவனம் வட்டம் ஓங்கூா் பாலம் அருகே பைக்கில் சென்றுள்ளாா்.

அப்போது அப்பகுதியில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டதாம். இதில் பலத்த காயமடைந்த வினோத் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் ஒலக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முதியவா் மரணம்:

திண்டிவனம், பாண்டி சாலையைச் சோ்ந்தவா் சு. முருகன்(60).இவா் திங்கள்கிழமை தனது வீட்டின் அருகே புதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் நின்றபோது, திண்டிவனம் நோக்கிச் சென்ற லாரி மோதியது.

இதில் பலத்த காயமடைந்த முருகனை, உறவினா்கள் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, அவா் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.