நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம்

விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.

Updated On :29 ஜனவரி 2024, 9:58 pm IST

விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
 முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அனைவருக்கும் மீண்டும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து விவசாயத் தொழிலாளர்களுக்கும், ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்தவர்களுக்கும் உடனடியாக ஓய்வூதிய ஆணை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம் நடத்துவதாக அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் அறிவித்தது.
 அதன்படி புதன்கிழமை வட்டத்தலைவர் சி.ராஜா தலைமையில் சங்கத்தினர் திரளானோர் பாலக்கரையிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டனர்.
 முக்கிய வீதிகள் வழியாகச் சென்று சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
 சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.துரைராஜ், செயலர் எம்.பி.தண்டபாணி, துணைத் தலைவர் ஏ.நாகராஜ், வட்டச் செயலர் எம்.கொளஞ்சிநாதன், பொருளர் எஸ்.ஜோதி, நிர்வாகிகள் டி.கங்காதரன், ஜி.தண்ணிமலை, ஜி.வேலன், ஆர்.ராஜாமணி, மாயவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.