வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

ஓய்வூதியர்கள் சங்கக் கூட்டம்

தமிழ்நாடு ஓய்வூதியர்கள் சங்கத்தின் கடலூர் மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் ந.பாண்டியன் தலைமையில் கடலூரில் அண்மையில் நடைபெற்றது. 

Updated On :23 ஜூலை 2018, 9:18 am IST

தமிழ்நாடு ஓய்வூதியர்கள் சங்கத்தின் கடலூர் மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் ந.பாண்டியன் தலைமையில் கடலூரில் அண்மையில் நடைபெற்றது. 
மாநில துணைத் தலைவர் கோ.கலியபெருமாள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். கூட்டத்தில் மாவட்ட சங்க நிர்வாகிகள் தேர்தலை நடத்துவது, சங்க நடவடிக்கைகளை துரிதப்படுத்தி சங்கத்தை மேலும் வலுப்படுத்துவது. ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்களுக்கான புதிய காப்பீட்டு திட்டத்தில் அனைவருக்கும் நன்மை பயக்கும் வகையில் அரசாணை வெளியிட அரசை வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நிர்வாகிகள் இர.சுந்தரமூர்த்தி, த.வேணுகோபால், சந்தானராஜ், பி.முனுசாமி, இளங்கோமணி, குமாரமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
முன்னதாக மாவட்டச் செயலர் த.கண்ணன் வரவேற்றார். நிர்வாகி எஸ்.சண்முகம் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.