தமிழ்நாடு ஓய்வூதியர்கள் சங்கத்தின் கடலூர் மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் ந.பாண்டியன் தலைமையில் கடலூரில் அண்மையில் நடைபெற்றது.
மாநில துணைத் தலைவர் கோ.கலியபெருமாள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். கூட்டத்தில் மாவட்ட சங்க நிர்வாகிகள் தேர்தலை நடத்துவது, சங்க நடவடிக்கைகளை துரிதப்படுத்தி சங்கத்தை மேலும் வலுப்படுத்துவது. ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்களுக்கான புதிய காப்பீட்டு திட்டத்தில் அனைவருக்கும் நன்மை பயக்கும் வகையில் அரசாணை வெளியிட அரசை வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நிர்வாகிகள் இர.சுந்தரமூர்த்தி, த.வேணுகோபால், சந்தானராஜ், பி.முனுசாமி, இளங்கோமணி, குமாரமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக மாவட்டச் செயலர் த.கண்ணன் வரவேற்றார். நிர்வாகி எஸ்.சண்முகம் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







