டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

தைப்பூச விழாவில் காணாமல் போன 25 குழந்தைகள் உள்பட 65 பேர் மீட்பு

வடலூர் தைப்பூச விழாவில் காணாமல்போன 25 குழந்தைகள் உள்பட 65 பேரை காவல் துறையினர் மீட்டனர்.

Updated On :23 ஜனவரி 2019, 8:42 am IST

வடலூர் தைப்பூச விழாவில் காணாமல்போன 25 குழந்தைகள் உள்பட 65 பேரை காவல் துறையினர் மீட்டனர்.
வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். 
பக்தர்களுக்கான பாதுகாப்புப் பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் தலைமையில், கூடுதல் கண்காணிப்பாளர் ரா.வேதரத்தினம், 8 துணைக் கண்காணிப்பாளர்கள், 25 ஆய்வாளர்கள், 42 உதவி ஆய்வாளர்கள், 400 காவலர்கள், வெளியூர்களில் இருந்து வரவழைக்கப்பட்ட காவலர்கள் 100 பேர், ஊர்க்காவல் படையினர் 100 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேலும், கூட்ட நெரிசலில் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கவும் தனி பிரிவு அமைக்கப்பட்டிருந்தது. இதில், 25 குழந்தைகள் உள்பட 65 பேர் காணாமல்போனதாக புகார் தெரிவிக்கப்பட்டு அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு பெற்றோர், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். மேலும், கூட்ட நெரிசலில் நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் நகை அணிந்து வந்த பெண்களுக்கு மொத்தம் ஒரு லட்சம் ஊக்குகள் வழங்கப்
பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.