மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தமிழகம் முழுவதும் ஆக.10 முதல் நியாயவிலைக் கடை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஆக.10-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது என

News image
கோப்புப் படம்
Updated On :6 ஆகஸ்ட் 2020, 1:28 pm

DIN

தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஆக.10-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது என அச்சங்க மாநில பொதுச்செயலாளர் கோ.ஜெயச்சந்திரராஜா தெரிவித்துள்ளார்.

சிதம்பரத்தில் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த பணியாளர்களுக்கு நிவாரணத் தொகை ரூ.50 லட்சம் வழங்க வேண்டும். கொவைட்-19 கரோனா வைரஸ் தொற்று மருத்துவக்குழு காப்பீடு திட்டத்தில் நியாயவிலைக்கடை பணியாளர்களை சேர்த்தல். 

காலியாக உள்ளட விற்பனையாளர் மற்றும் எடையாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். நியாயவிலைக்கடைகளுக்கு நூறு சதவீத பொருள்களை ஒதுக்கீடு செய்து வழங்க வேண்டும்.  விற்பனையாகாத ரூ.500-க்கான மளிகை தொகுப்பு பொருள்களை நிர்வாகமே திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும். 

கரோனா காலத்தில் சாலை விபத்தில் மரணமடைந்த பணியாளர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஆக.10ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் நியாயவிலைக்கடை ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது என கோ.ஜெயச்சந்திரராஜா தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.