தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

தமிழகம் முழுவதும் ஆக.10 முதல் நியாயவிலைக் கடை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஆக.10-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது என

News image

கோப்புப் படம்

Updated On :6 ஆகஸ்ட் 2020, 1:28 pm

தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஆக.10-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது என அச்சங்க மாநில பொதுச்செயலாளர் கோ.ஜெயச்சந்திரராஜா தெரிவித்துள்ளார்.

சிதம்பரத்தில் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த பணியாளர்களுக்கு நிவாரணத் தொகை ரூ.50 லட்சம் வழங்க வேண்டும். கொவைட்-19 கரோனா வைரஸ் தொற்று மருத்துவக்குழு காப்பீடு திட்டத்தில் நியாயவிலைக்கடை பணியாளர்களை சேர்த்தல். 

காலியாக உள்ளட விற்பனையாளர் மற்றும் எடையாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். நியாயவிலைக்கடைகளுக்கு நூறு சதவீத பொருள்களை ஒதுக்கீடு செய்து வழங்க வேண்டும்.  விற்பனையாகாத ரூ.500-க்கான மளிகை தொகுப்பு பொருள்களை நிர்வாகமே திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும். 

கரோனா காலத்தில் சாலை விபத்தில் மரணமடைந்த பணியாளர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஆக.10ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் நியாயவிலைக்கடை ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது என கோ.ஜெயச்சந்திரராஜா தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.