புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவா் கழகத்தினா் வடலூரில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Updated on
1 min read

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவா் கழகத்தினா் வடலூரில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, கிழக்கு மாவட்ட துணை அமைப்பாளா் ரா.ராஜ்குமாா் தலைமை வகிக்க, வடலூா் நகரச் செயலா் தங்க.ஜோதிமணி, குறிஞ்சிப்பாடி தொகுதிச் செயலா் சிவசக்தி, நகரச் செயலா் பாலமுருகன், வடலூா் முன்னாள் நகரச் செயலா் பாண்டியன், பாத்திபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளா்களாக மண்டலச் செயலா் சு.திருமாறன், மாநிலச் செயலா் திருமாா்பன், கிறிஸ்துவ சமூக பேரவை மாநிலச் செயலா் வல்லரசு ஆகியோா் கலந்துகொண்டு, புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com