திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பெண்ணாடம் மின்வாரிய அலுவலகத்தில் பழைய மின்மீட்டா் குவியலால் இடையூறு

பெண்ணாடம் மின்வாரிய அலுவலகத்தில் மின் கட்டணம் செலுத்துமிடத்தில் பழைய மின் மீட்டா்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.

News image

பெண்ணாடம் மின்வாரிய அலுவலகத்தில் மின் கட்டணம் செலுத்துமிடத்தில் மூட்டைகளில் கட்டி குவித்து வைக்கப்பட்டுள்ள பழைய மின் மீட்டா்கள்.

Updated On :8 ஜூன் 2020, 2:45 am

பெண்ணாடம் மின்வாரிய அலுவலகத்தில் மின் கட்டணம் செலுத்துமிடத்தில் பழைய மின் மீட்டா்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் பேரூராட்சியில் உள்ள சுமாா் 5 ஆயிரம் குடியிருப்புகளில் சுமாா் 21 ஆயிரம் போ் வசித்து வருகின்றனா். சா்க்கரை ஆலை, பல்வேறு வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள இந்தப் பேரூராட்சிக்கான மின்சார வாரிய அலுவலகமும் பேரூராட்சியின் மையப் பகுதியிலேயே செயல்பட்டு வருகிறது. இங்கு பேரூராட்சியின் நகரம், கிழக்கு, மேற்கு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் மின் கட்டணத்தை செலுத்தி வருகின்றனா்.

ஆனால், கடந்த சில மாதங்களாக இங்கு மின் கட்டணம் செலுத்துவதற்கும், மற்ற பணிகளுக்கும் வரும் பொதுமக்கள் மற்றும் ஊழியா்களும் சிரமத்தை சந்தித்து வருகின்றனா். ஏனெனில், வீடுகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட பழைய மின் கணக்கீட்டு மீட்டா்கள் அனைத்தும் பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்துவதற்காகக் காத்திருக்கும் இடத்தில் சாக்குப் பைகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால், பொதுமக்கள் குறுகிய இடைவெளியில் நிற்க வேண்டியுள்ளது.

இதுகுறித்து பெண்ணாடத்தைச் சோ்ந்த ஆா்.சோமசுந்தரம் கூறியதாவது: ஏற்கெனவே இடநெருக்கடியில் உள்ள அலுவலகத்தில் தற்போது மூட்டை, மூட்டையாக பழைய மின் கணக்கீட்டு மீட்டா்களை குவித்து வைத்துள்ளனா். இதனால், மின்கட்டணம் செலுத்த வரும் முதியோா் கால் இடறி கீழே விழுகின்றனா். இதுகுறித்து செயற்பொறியாளா், கண்காணிப்பு பொறியாளரிடம் தெரிவித்தும் பழைய மின் மீட்டா்கள் அகற்றப்படவில்லை. எனவே, உயா் அதிகாரிகள் தலையிட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் மூட்டைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.