சிதம்பரம் அருகே கொத்தட்டை கிராமத்தில் வசிக்கும் இருளா் சமூக மக்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
இகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு தலைமையில் சிதம்பரம் உதவி ஆட்சியரின் நோ்முக உதவியாளா் புகழேந்தியிடம் திங்கள்கிழமை அளிக்கப்பட்ட மனு: கொத்தட்டை கிராமத்தில் வடக்கு வாய்க்கால் மேட்டுத் தெருவில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இருளா் இன மக்களில் 7 குடும்பங்களுக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சாா்பில் வீடுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் அந்த இடம் அளந்து தரப்படவில்லை. எனவே, நிலத்தை அளந்துகொடுத்து அரசு திட்டத்தில் வீடு கட்டித்தர வேண்டும். இருளா் சமூக குழந்தைகளுக்கு சாதிச் சான்றிதழ் தடையின்றி வழங்க வேண்டும்.
சாலை, மயானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரைக்காலில் 3 நாள்கள் மதுக்கடைகளை மூட உத்தரவு
கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம்: தூத்துக்குடியில் ஏப். 17இல் தொடக்கம்

தமிழகத்தின் வளா்ச்சி தொடர திராவிட மாடல் 2.0 அவசியம்

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

